search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரபேல் விவகாரம்"

    ரபேல் விவகாரத்தில் மத்திய அரசு தவறான தகவல்களை தெரிவித்து தனக்கு சாதகமான தீர்ப்பை பெற்றதாக, சுப்ரீம் கோர்ட்டில் யஷ்வந்த் சின்கா உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்து உள்ளனர். #Rafale #YashwantSinha
    புதுடெல்லி:

    பிரான்ஸ் நாட்டிடம் இருந்து இந்திய விமானப்படைக்கு ரபேல் போர் விமானங்கள் வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டதில் ஊழல் நடந்ததாக கூறி முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி, வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆகியோர் தொடர்ந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு கடந்த டிசம்பர் 14-ந்தேதி தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறியது.

    இந்த நிலையில், அந்த ஒப்பந்தம் தொடர்பாக பத்திரிகையில் வெளியான புதிய ஆவணங்களின் அடிப்படையில், ஏற்கனவே வழங்கிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

    இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், பத்திரிகையில் வெளியான தகவல் முழுமை இல்லாதது என்றும், மேலும் அந்த தகவல் சட்டவிரோதமாக பெறப்பட்டது என்றும், எனவே மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

    இந்த மனுவுக்கு யஷ்வந்த் சின்கா உள்ளிட்ட 3 பேர் சார்பிலும் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் எதிர்பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அதில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பான சில உண்மைகளை மறைத்து, தவறான தகவல்களை தெரிவித்து அதன் அடிப்படையில் மத்திய அரசு தனக்கு சாதகமான தீர்ப்பை பெற்று இருப்பதாகவும், எனவே அந்த தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

    இந்த எதிர்பதில் மனுவுக்கு பதில் அளிக்கும் வகையில் மத்திய அரசின் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், உண்மைகளை மறைத்து தவறான தகவல்களின் அடிப்படையில் அரசு தனக்கு சாதகமான தீர்ப்பை பெற்றதாக கூறுவது முற்றிலும் உண்மைக்கு மாறானது, அடிப்படை இல்லாதது என்றும், பத்திரிகையில் வெளியான சில குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் தவறான எண்ணத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டு இருக்கிறது.

    பொய்யான தகவல்கள் வெளியாக காரணமாக இருந்து கோர்ட்டை தவறாக வழிநடத்தியதற்காக அடையாளம் தெரியாத அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டு உள்ளது.

    யஷ்வந்த் சின்கா உள்ளிட்டோரின் மறுஆய்வு மனு இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது. #Rafale #YashwantSinha
    ரபேல் விவகாரத்தில் நாட்டின் காவலாளியான பிரதமர் மோடி திருடன் என்று சுப்ரீம் கோர்ட் கூறியதாக குறிப்பிட்ட ராகுல் காந்தி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 15-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. #BJPMP #Rahulremarks #remarksonRafale #SC #MeenakshiLekhi
    புதுடெல்லி:

    ரபேல் தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரும் மனுக்கள் மீது புதிய ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் என சுப்ரீம் கோர்ட் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது.  

    இந்த தீர்ப்பை வரவேற்று அமேதியில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ’ரபேல் பேரத்தில் சில வகையிலான ஊழல் நடந்திருக்கிறது என்பதை சுப்ரீம் கோர்ட் ஏற்றுக்கொண்டுள்ளது’ என குறிப்பிட்டார்.

    மேலும், சுப்ரீம் கோர்ட் நீதி வழங்கி உள்ளது. ரபேல் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் முன்னர் தன்னை குற்றமற்றவர் என கூறிவிட்டதாக மோடி சொல்லிக்கொண்டிருக்கிறார். புதிய ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடத்த சம்மதித்தன் மூலம் நாட்டின் காவலாளியான பிரதமர் மோடி திருடன் என சுப்ரீம் கோர்ட்டும் கருதுகிறது என்னும் பொருள்படும் வகையிலும் ராகுல் கூறினார்.



    சுப்ரீம் கோர்ட் சொல்லாத ஒரு கருத்தை சுப்ரீம் கோர்ட்டின் கருத்தாக திரித்துக் கூறிய ராகுல் காந்திக்கு எதிராக ரபேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என பாஜக தலைமை எச்சரித்திருந்தது.

    இந்நிலையில், பாஜக எம்.பி.மீனாட்சி லேக்கி இவ்விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் இன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்துள்ளார். மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி மூலம் தொடரப்பட்ட இந்த வழக்கு வரும் 15-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. #BJPMP #Rahulremarks #remarksonRafale #SC  #MeenakshiLekhi
    ரபேல் போர் விமான பேரம் தொடர்பான வழக்கில், சீராய்வு மனுக்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஆவணங்களை ஆய்வு செய்யக்கூடாது என மத்திய அரசு கூறியதை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. #RafaleDeal #SC
    புதுடெல்லி:

    ரபேல் போர் விமான பேரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய மனுக்களை சுப்ரீம் கோர்ட் கடந்த டிசம்பர் 14-ந் தேதி தள்ளுபடி செய்தது. ரபேல் ஒப்பந்தத்தில் தவறு ஏதும் நடைபெறவில்லை என கூறியது. அந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி, முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி, வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்தனர்.

    இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது, ஒரு ஆங்கில பத்திரிகையில் ரபேல் பேரம் குறித்த ரகசிய ஆவணங்கள் வெளியாகின. அதே ஆவணங்கள், சீராய்வு மனுக்களுடனும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ஆவணங்கள், ராணுவ அமைச்சகத்தில் இருந்து திருடப்பட்டுள்ளதாக மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தார். பின்னர், “ஆவணங்கள் திருடப்படவில்லை, நகல் எடுக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.



    அதன்பின்னர் சீராய்வு மனுக்களுக்கு மத்திய அரசு சார்பில் பிரமாண பத்திர மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ரபேல் ரகசிய ஆவணங்களை திருடி வெளியிட்டதால், தேச பாதுகாப்புக்கு அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், அந்த ஆவணங்களை உச்ச நீதிமன்றம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் கூறப்பட்டிருந்தது.

    இந்நிலையில் இவ்வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், சீராய்வு மனுக்களை விசாரணைக்கு ஏற்றனர்.

    சீராய்வு மனுக்களுடன் இணைக்கப்பட்ட ஆவணங்களை பரிசீலனைக்கு ஏற்க முடிவு செய்திருப்பதாகவும், அந்த ஆவணங்கள் மீது விரிவாக ஆய்வு செய்யப்படும் என்றும் நீதிபதிகள் கூறினர். விசாரணை தொடங்கும் தேதியை விரைவில் அறிவிக்க உள்ளனர். #RafaleDeal #SC
    ரபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் அலுவலகம் நேரடியாக தலையிட்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். #RahulGandhi #PMModi #RafaleIssue
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;

    ரபேல் ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் பிரான்சிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது பிரதமர் அலுவலகம் நேரடியாக தலையிட்டுள்ளது. ரபேல் மோசடியில் பிரதமர் மோடி தவறு செய்துள்ளார். மோசடி நடந்துள்ளது தெளிவாக தெரிகிறது.

    பாதுகாப்புத் துறை மந்திரி நிர்மலா சீதாராமன் பொய்களை கூறுகிறார். பிரதமர் மோடியினாலே அனில் அம்பானியை தான் தேர்வு செய்ததாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஒப்புக்கொண்டுள்ளார்.



    பிரதமர் மோடி 30 ஆயிரம் கோடி ரூபாயை விமானப் படையிடம் இருந்து கொள்ளையடித்து அனில் அம்பானிக்கு கொடுத்துள்ளார். இதைத்தான் நாங்கள் கடந்த ஓராண்டாக எழுப்பி வருகிறோம்.

    தற்போது மத்திய பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் அளித்த அறிக்கையில், ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பிரான்ஸ் அரசுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகையில், பிரதமர் மோடி தனியாக பேசி உள்ளார் என கூறப்பட்டுள்ளது. ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் பொய்யான தகவல்களை அளித்துள்ளது என தெரிவித்துள்ளார். #RahulGandhi #PMModi #RafaleIssue
    பாராளுமன்றத்தில் நடந்து கொண்ட விதத்திற்காக நாட்டு மக்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். #Congress #RahulGandhi #NirmalaSitharaman
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் மக்களவையில் ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தில் பேசிய பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன், ரபேல் விவகாரத்தில் உண்மைகளை கண்டு காங்கிரஸ் அஞ்சுகிறது. ஹெச்.ஏ.எல். நிறுவனத்துக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஆர்டர் தந்துள்ளோம் என தெரிவித்தார். 

    இதற்கிடையே, ஹெச்.ஏ.எல். நிறுவனத்துக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஆர்டர் தந்ததாக பாராளுமன்றத்தில் பொய் பேசிய நிர்மலா சீதாராமன் ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று வலியுறுத்தினார்.

    இந்நிலையில், பாராளுமன்றத்தில் நடந்து கொண்ட விதத்திற்காக நாட்டு மக்களிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.



    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், ராகுல்காந்தி அறிக்கையை முழுமையாக படிக்க வேண்டும். பாராளுமன்றத்தில் நடந்து கொண்ட விதத்திற்காக நாட்டு மக்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். நாட்டை தவறாக வழிநடத்தும் விதத்தில் நடந்து கொண்டதற்கு ராகுல் வெட்கப்பட வேண்டும். 

    ஹெச்.ஏ.எல். நிறுவனத்திற்கு எந்த ஒப்பந்தமும் தரப்படவில்லை என ராகுல் கூறியது தவறு. ஹெச்.ஏ.எல் நிறுவனத்திற்கு 26 ஆயிரத்து 570 கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்புத்துறை பணி ஒப்பந்தம் வழங்கப்பட்டது. மேலும், ஹெச்.ஏ.எல். நிறுவனத்திற்கு 73 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட உள்ளது என பதிவிட்டுள்ளார். #Congress #RahulGandhi #NirmalaSitharaman
    ஹெச்.ஏ.எல். நிறுவனத்துக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஆர்டர் தந்ததாக பாராளுமன்றத்தில் பொய் பேசிய நிர்மலா சீதாராமன் ராஜினாமா செய்ய வேண்டும் என காங். தலைவர் ராகுல் வலியுறுத்தியுள்ளார். #RafaleDeal #NirmalaSitharaman #Congress #RahulGandhi
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் மக்களவையில் ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தில் பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் பதிலளித்தார்.

    அப்போது அவர், ரபேல் விவகாரத்தில் உண்மைகளை கண்டு காங்கிரஸ் அஞ்சுகிறது. தற்போது காங்கிரஸ் அமளியில் ஈடுபடுவது உண்மைகளை மறைப்பதற்காகவே. நாட்டின் பாதுகாப்பிற்கு மட்டுமே பாஜக அரசு முக்கியத்துவம்  கொடுக்கிறது. ஹெச்.ஏ.எல். நிறுவனத்துக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஆர்டர் தந்துள்ளோம் என தெரிவித்தார். 



    இந்நிலையில், ஹெச்.ஏ.எல். நிறுவனத்துக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஆர்டர் தந்ததாக பாராளுமன்றத்தில் பொய் பேசிய நிர்மலா சீதாராமன் ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், பாராளுமன்றத்தில் பேசிய பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் ஹெச்.ஏ.எல். நிறுவனத்துக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் ஆர்டர் தந்துள்ளோம் என தெரிவித்தார். ஆனால், இதுவரை எந்த ஒரு ஆர்டரும் பெறப்படவில்லை. 

    எனவே, பாராளுமன்றத்தில் பேசிய பாதுகாப்பு துறை மந்திரி ஆர்டர் தந்ததற்கான ஆதாரங்களை காட்ட வேண்டும். இல்லையேல் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். #RafaleDeal #NirmalaSitharaman #Congress #RahulGandhi
    மக்களவையில் ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக நடந்த விவாதத்தில் பேசிய பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன், ரபேல் விவகாரத்தில் உண்மைகளை கண்டு காங்கிரஸ் அஞ்சுகிறது என்றார். #RafaleDeal #BJP #NirmalaSitharaman #Congress
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் மக்களவையில் பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன்  இன்று ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தில் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ரபேல் விவகாரத்தில் உண்மைகளை கண்டு காங்கிரஸ் அஞ்சுகிறது. ராணுவத்திற்கு உபகரணங்களை சரியான நேரத்தில் வாங்குவதற்கு முன்னுரிமை கொடுக்கப்படும். 
     
    நாட்டின் பாதுகாப்பிற்கு மட்டுமே பாஜக அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது. காங்கிரஸ் கேள்விகள் கேட்பதை நிறுத்திவிட்டு, குற்றச்சாட்டுகளுக்கு முதலில் பதிலளிக்க வேண்டும், தற்போது காங்கிரஸ் அமளியில் ஈடுபடுவது உண்மைகளை மறைப்பதற்காகவே. அவர்களுக்கு (காங்கிரஸ்) விமானத்தை வாங்க  விருப்பம் கிடையாது, அவர்கள் எதுவும் செய்யவில்லை. 



    வரும் செப்டம்பர் மாதத்தில் முதல் ரபேல் விமானம் வழங்கப்படும். விமானம் இந்த ஆண்டு இந்தியாவிற்கு வழங்கப்படும். 36 விமானங்களில் கடைசி விமானம் 2022-ம் ஆண்டு வழங்கப்படும். ஒப்பந்தம், பேச்சுவார்த்தை, பேரம் என அனைத்திலும் வெளிப்படைத்தன்மை இருக்கிறது.

    பாதுகாப்பு ஒப்பந்தம் மற்றும் பாதுகாப்பில் ஒப்பந்தம் என்பதற்கு இடையே வேறுபாடு உள்ளது. தேசிய பாதுகாப்புக்கே நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.  #RafaleDeal #BJP #NirmalaSitharaman #Congress
    ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் எழுப்பிய கோரிக்கையை அரசு நிராகரித்ததால் மக்களவையில் அமளி ஏற்பட்டது. #WinterSession #CongDemandsJPC
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், ரபேல் விவகாரம், மேகதாது விவகாரம் மற்றும் மாநிலம் சார்ந்த பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்களும் வழங்கப்படுகின்றன. கூட்டத்தொடரின் 7-வது நாளான இன்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன.

    ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாகவும், இது தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.



    மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்பிக்களும், ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து கேட்டு தெலுங்கு தேசம் கட்சி எம்பிக்களும் முழக்கங்கள் எழுப்பினர். இதுஒருபுறமிருக்க ஆளும் பாஜக எம்பிக்கள் சிலர், தங்கள் இருக்கைகளில் இருந்தபடியே சில பிரச்சினைகளை எழுப்பினர். இதன் காரணமாக அவையில் கடும்  கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

    இதனால் அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 12 மணிக்கு அவை கூடியபோதும் எதிர்க்கட்சிகளின் அமளி நீடித்தது. ரபேல் ஒப்பந்தத்தால் அரசுக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், இது தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தினார்.

    இதற்கு பதிலளித்து பேசிய பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர், ரபேல் விவகாரம் தொடர்பாக அரசு விவாதிக்க தயாராக உள்ளது என்றார். ஆனால், பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தார்.

    கோரிக்கை ஏற்கப்படாததால் காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பினர். அவையின் மையப்பகுதிக்கு சென்று கோஷமிட்டனர். மற்ற கட்சிகளின் எம்பிக்களும் அங்கு சென்று அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. 2 மணிக்கு அவை கூடியபோது வாடகைத்தாய் ஒழுங்குமுறை சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றது. #WinterSession #CongDemandsJPC
    ரபேல் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தவறான தகவல் அளித்ததாக கூறி, மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காங்கிரஸ் கட்சி உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்தது. #RafaleCase #Congress #Parliament
    புதுடெல்லி:

    ரபேல் போர் விமான பேரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் தள்ளுபடி செய்தது. அந்த தீர்ப்பில், ரபேல் விமான விலை விவரம் குறித்த தலைமை கணக்கு தணிக்கை அறிக்கையை நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வு செய்ததாக கூறப்பட்டு இருந்தது.

    ஆனால், உண்மையில், அந்த அறிக்கை, நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும், சுப்ரீம் கோர்ட்டுக்கு மத்திய அரசு தவறான தகவலை அளித்திருப்பதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியது. அதைத்தொடர்ந்து, தீர்ப்பில் திருத்தம் செய்யக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனுதாக்கல் செய்துள்ளது.



    இந்நிலையில், மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காங்கிரஸ் கட்சி உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்துள்ளது.

    மக்களவையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும், மாநிலங்களவையில், எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத்தும் இந்த நோட்டீசை கொடுத்துள்ளனர்.

    இதுகுறித்து மல்லிகார்ஜூன கார்கே நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசுக்கு எதிராக, குறிப்பாக மத்திய சட்ட அமைச்சகத்துக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்துள்ளேன். ஏனென்றால், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்துக்கு சட்ட அமைச்சகம்தான் ஒப்புதல் அளித்தது.

    சுப்ரீம் கோர்ட்டுக்கு தவறான தகவலை அளித்து, நாடாளுமன்றத்தையும், மக்களையும் திசை திருப்பியது ஏன் என்று சட்ட அமைச்சகத்திடம் விளக்கம் கேட்கும்வகையில் இந்த நோட்டீசை கொடுத்துள்ளோம்.

    இந்த அரசு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஆகவே, நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை கோரி உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாநிலங்களவை நேற்று கூடியபோது, உறுப்பினர்கள் கொடுத்த நோட்டீஸ்களை அவைத்தலைவர் வெங்கையா நாயுடு வாசித்தார். அப்போது, குலாம் நபி ஆசாத், தான் கொடுத்த உரிமை மீறல் நோட்டீஸ் பற்றி தெரிவித்தார்.

    அதற்கு வெங்கையா நாயுடு, இந்த பிரச்சினை சுப்ரீம் கோர்ட்டில் இருப்பதால், எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று கூறினார்.

    இதற்கிடையே, பிரதமர் மோடிக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரக்கோரி, காங்கிரஸ் உறுப்பினர் சுனில் ஜாக்கர், மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் மனு கொடுத்தார். அம்மனு தனது பரிசீலனையில் இருப்பதாக சுமித்ரா மகாஜன் கூறினார்.

    அதுபோல், ரபேல் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் தெரிவித்த பொய்யான குற்றச்சாட்டுகளுக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரக்கோரி, பா.ஜனதா தரப்பில் அதன் தலைமை கொறடா அனுராக் தாக்குர் உள்ளிட்ட 4 எம்.பி.க்கள் சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் மனு அளித்தனர்.

    இதற்கிடையே, நாடாளுமன்ற கூட்டுக்குழுவை விட சுப்ரீம் கோர்ட்டே உயர்ந்தது என்பதால், ரபேல் விவகாரம் குறித்து கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட முடியாது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். #RafaleCase #Congress #Parliament 
    ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க முடியாது என நிதி மந்திரி அருண் ஜெட்லி திட்டவட்டமாக தெரிவித்தார். #ArunJaitley #RafaleDeal
    புதுடெல்லி:

    பிரான்ஸ் நாட்டில் இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு மத்திய அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.

    ஆனால் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என கடந்த வாரம் தீர்ப்பளித்தது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது.

    எனினும் இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரசார் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் அவர்கள் போராடி வருவதால் இரு அவைகளும் முடங்கி வருகிறது.

    ஆனால் ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க முடியாது என நிதி மந்திரி அருண் ஜெட்லி திட்டவட்டமாக கூறியுள்ளார். இது தொடர்பாக தனது ‘டுவிட்டர்’ தளத்தில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது:-

    ரபேல் ஒப்பந்தத்தை போபர்ஸ் ஒப்பந்தத்துடன் ஒழுக்கக்கேடாக ஒப்பிடும் முயற்சியில் ராகுல் காந்தி ஈடுபட்டு உள்ளார். ஆனால் ரபேல் ஒப்பந்தத்தில் இடைத்தரகர் இல்லை, லஞ்சம் இல்லை, ஒட்டாவியோ குவாத்ரோச்சி இல்லை.

    ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் அரசுக்கு எதிராக கூறப்பட்ட அனைத்து வார்த்தைகளும் பொய் என நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஒப்பந்தம் தொடர்பாக கூறப்பட்ட பொய்கள் அனைத்தும் வெளிப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதை சுப்ரீம் கோர்ட்டு தெளிவுபடுத்தி இருக்கிறது.

    ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக சுதந்திரமான, பாரபட்சமற்ற விசாரணையை நீதித்துறை நடத்தி இருக்கிறது. இதில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து அது சட்டப்பூர்வமாகி விட்டது. கோர்ட்டு தீர்ப்புதான் இறுதியானது. இதை கோர்ட்டு மட்டுமின்றி வேறு யாராலும் மறு ஆய்வு செய்ய முடியாது.

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு மாறாக, ஒரு அரசியல் அமைப்பு (நாடாளுமன்ற கூட்டுக்குழு) எதையும் ஒருபோதும் கண்டு பிடிக்க முடியாது. எனவே ரபேல் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க முடியாது.

    இவ்வாறு அருண் ஜெட்லி கூறியுள்ளார். #ArunJaitley #RafaleDeal 
    ரபேல் விவகாரம் தொடர்பாக பார்லிமெண்ட் கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #RafaleCase #SupremeCourt #RahulGandhi
    புதுடெல்லி:

    பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து ரூ.58 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ‘ரபேல்’ போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
     
    இந்த பேரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்புடன் கூடிய விசாரணைக்கு உத்தரவிடக்கோரி வக்கீல் எம்.எல்.சர்மா,  வக்கீல் வினீத் தண்டா, ஆம் ஆத்மி பிரமுகர் சஞ்சய் சிங் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதன்பின், முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி, வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆகியோர் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யுமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனுக்கள் மீது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரித்தது. விசாரணை முடிந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது.

    இந்நிலையில், தலைமை நீதிபதி அமர்வு, இம்மனுக்கள் மீது இன்று தீர்ப்பு அளித்தது. அப்போது ‘ரபேல்’ விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிட முடியாது. ரபேல் போர் விமானம் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதுதான். அரசின் கொள்கை சார்ந்த முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். அத்துடன் விசாரணை கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தனர். 



    இந்நிலையில், ரபேல் விவகாரத்தில் பார்லிமெண்ட் கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

    இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ரபேல் விவகாரம் தொடர்பான கேள்விக்கு நிர்மலா சீதாராமன் மற்றும் அருண் ஜெட்லி மட்டுமே பதிலளித்து வருகின்றனர். மோடி இதுகுறித்து மவுனமாகவே உள்ளார்.

    பார்லிமெண்ட் கூட்டுக்குழு விசாரணைக்கு பிரதமரும், மத்திய அமைச்சர்களும் மறுப்பு தெரிவிப்பது ஏன்? சிஏஜி அறிக்கை குறித்து அரசு எங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்தார். #RafaleCase #SupremeCourt #RahulGandhi
    ரபேல் விவகாரம் தொடர்பாக ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாநிலங்களவையில் இன்று கடும் அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. #RafaleDeal #WinterSession #RajyaSabhaAdjourned
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மாநிலம் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் பாஜக ஆட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. எதிர்க்கட்சிகள் கொடுத்த ஒத்திவைப்பு தீர்மானங்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இதனால் உறுப்பினர்கள் போராட்டம் நீடிக்கிறது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் காலை 11 மணிக்கு பாராளுமன்றம் கூடியது. அப்போது, மக்களவையில் மேகதாது விவகாரம் தொடர்பாக அதிமுக உறுப்பினர்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். ரபேல் போர் விமான ஒப்பந்த ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தும்படி காங்கிரஸ் எம்பிக்கள் முழக்கமிட்டனர்.

    மேலும் ரபேல் விவகாரத்தில் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் கூறி வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி பாஜக எம்பிக்கள் முழக்கம் எழுப்பினர்.


    ரபேல் ஒப்பந்த முறைகேடு புகார் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து பாஜக எம்பிக்கள் இந்த விவகாரத்தை எழுப்பினர். பதிலுக்கு காங்கிரஸ் எம்பிக்களும் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பியதால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து அவை நடவடிக்கைகள் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    இதேபோல் மாநிலங்களவையிலும் மாநிலம் சார்ந்த பிரச்சனைகளை முன்வைத்தும், ரபேல், ரிசர்வ் வங்கி விவகாரத்தை முன்வைத்தும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பாஜக எம்பிக்கள் முழக்கங்கள் எழுப்பினர். இரு தரப்பினரும் இடைவிடாமல் முழக்கமிட்டதால் முதலில் அரை மணி நேரம் அவை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு அவை கூடியபோதும், அமளி நீடித்தது. இதையடுத்து நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.  #RafaleDeal #WinterSession #RajyaSabhaAdjourned 
    ×